Skip to main content

உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வின் மூலம் நிரப்பப்படும்

உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச்செயலாளர் சந்தீப்
சக்சேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழக அரசுக்கு வேளாண்மை ஆணையர் கடிதம் எழுதினார். அதில், உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடம் 2011–12–ம் ஆண்டிற்கு 417 என்று மதிப்பீடு செய்து அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.2009 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் அந்த பணியிடங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் நேரடியாக நிரப்பப்பட்டது. தற்போது திறமையான, மேம்பட்ட மற்றும் இளையோருக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், போட்டித்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் மேற்கொண்டால் சிறப்பாக அமையும். 

மேலும் மாநில முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தகுதியானவர்கள் அனைவரும் பங்கேற்கும் விதத்தில் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு மேற்கொள்வது உகந்ததாக இருக்கும். இந்த உதவி வேளாண்மை அலுவலர் பணிநியமனத்தினை தமிழ்நாடு தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டு வந்து,417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்பிட ஆணை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத்தின் ஆலோசனை கோரப்பட்டது. இந்த பணியிடங்களை தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து, 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேளாண்மை ஆணையரின் கருத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து, அந்த பணியிடங்களைதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பலாம் என முடிவு செய்து அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக, தமிழ்நாடு அரசு பணி விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன