Skip to main content

உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வின் மூலம் நிரப்பப்படும்

உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச்செயலாளர் சந்தீப்
சக்சேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழக அரசுக்கு வேளாண்மை ஆணையர் கடிதம் எழுதினார். அதில், உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடம் 2011–12–ம் ஆண்டிற்கு 417 என்று மதிப்பீடு செய்து அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.2009 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் அந்த பணியிடங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் நேரடியாக நிரப்பப்பட்டது. தற்போது திறமையான, மேம்பட்ட மற்றும் இளையோருக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், போட்டித்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் மேற்கொண்டால் சிறப்பாக அமையும். 

மேலும் மாநில முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தகுதியானவர்கள் அனைவரும் பங்கேற்கும் விதத்தில் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு மேற்கொள்வது உகந்ததாக இருக்கும். இந்த உதவி வேளாண்மை அலுவலர் பணிநியமனத்தினை தமிழ்நாடு தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டு வந்து,417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்பிட ஆணை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத்தின் ஆலோசனை கோரப்பட்டது. இந்த பணியிடங்களை தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து, 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேளாண்மை ஆணையரின் கருத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து, அந்த பணியிடங்களைதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பலாம் என முடிவு செய்து அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக, தமிழ்நாடு அரசு பணி விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு