நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மாவட்டம் முழுக்க ஓட்டுச் சாவடிகளில் பணிபுரிய, 3,060 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்; இருப்பினும், கூடுதலாகவே பணியாளர்கள் உள்ளனர். தவிர, 62 தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 9 பறக்கும் படை, 9 கண்காணிப்புப் படை அலுவலர்கள் பணியில் நியமிக்க உள்ளனர். தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு பல கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, ஓட்டுப்பதிவை கண்காணிக்க 305 வெப் கேமராக்கள் தயாராக உள்ளன; கூடுதலாக, 318 மேராக்கள் வரவழைக்கப்பட உள்ளன. வெப்கேமராக்களை இயக்கும் பணியில் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு, கலெக்டர் சங்கர் கூறினார்.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...
Comments
Post a Comment