Skip to main content

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விக்கு அரசு பள்ளிகளில் தனி ஆசிரியர்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, சிறப்பு பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் வடிவேல் முருகன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகள் படிக்கின்றனர். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அதிக கவனிப்பு கொடுக்க வேண்டும். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு பிஎட் படித்தவர்கள் அதிகளவில் உள்ளனர். 


அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பொது பிஎட் முடித்தவர்கள் பாடங் களை கற்பிக்கின்றனர். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வியில் சமவாய்ப்பு, சம உரிமை, சம அந்தஸ்து வழங்க வேண்டும் என 1995 சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி, பள்ளிகளில் பிற மாணவர்களுடன் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்க, சிறப்பு பிஎட் படித்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவர்களால் மட்டுமே மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அளிக்க முடியும். மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வியில் தனிக்கவனம் செலுத்துவதன் மூலம், அவர்கள் சமுதாயத்தில் தனித்துவம் மிக்கவர்களாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி, அதில் எங்கள் சங்கத்தை சேர்ந்த சிறப்பு பிஎட் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, மனுதாரர் சங்கம் அனுப்பிய மனுவை 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு