Skip to main content

மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு இன்று வேலை நிறுத்தம்மாணவர்கள் பாதிப்பு

தமிழகத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி சார்பில் நேற்று உள்ளிருப்பு போரா ட்டம் நடத்தப்பட் டது. இதில் திருச்சி மாவட்டத் தில் 2,500 பேர் உள்பட தமி ழகம் முழுவதும் 59,600 ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர்.
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணை யான ஊதியத்தை இடை நிலை ஆசிரியருக்கும் வழங்க வேண்டும். பங் கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடப்பட் டது. இது குறித்து கடந்த வாரம் பள்ளிக் கல்வி முதன்மை செயலாளர் ஆசிரியர் கூட் டணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது கோரிக்கைகளை நிறை வேற்ற அரசு தரப்பில் கால அவ காசம் கேட்கப்பட் டது. இதற்கு 2009ம் ஆண்டு முதல் போராட் டம் நடத்தப்பட்டு வருவ தால் கால அவகாசம் வழங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தை ஆசிரியர் கூட்டணியினர் அறிவித்தனர். 
அதன்படி தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டணியினர் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் 59,600 ஆசிரிய, ஆசிரியைகள் கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக ளில் உள்ளிருப்பு போராட் டம் நடத்தினர். திருச்சி மாவட்டத்தில் உள்ள 16 ஒன்றியங்களில் 1,300 பள்ளிகளில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியைச் சேர்ந்த 2,500 ஆசிரியர்கள் கோரி க்கை அட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். 
இதனால் பாடம் கற்பிக்கும் பணி பாதிக்கப்பட் டது. இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், திட்டமிட்டபடி உள்ளிருப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. நாளை (இன்று) பணிக்கு செல்லா மல் வேலை நிறுத்த போரா ட்டம் நடத்தப்படும். போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அரசு மாற்று ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது என்றார். ஆசிரியர்களின் இந்த போராட்டத்தால் பள்ளிக ளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு