Skip to main content

இன்றும், நாளையும் ஆசிரியர் ஸ்டிரைக் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொடக்க கல்வியில் தமிழ்வழி கல்வி முறையை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இன்று கோரிக்கை அட்டை அணிந்து தொடக்க கல்வி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது : தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி பிப்ரவரி 25ம் தேதி நடத்த உள்ள உள்ளிருப்பு போராட்டம் மற்றும் 26ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக எந்த பள்ளிகளும் மூடப்படக்கூடாது. அனைத்து பள்ளிகளும் இந்த நாட்களில் முழுமையாக செயல்படும் விதத்தில் மாற்று பணியில் மற்ற பள்ளிகளில் இருந்து வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களை கொண்டும் எழுத்து பூர்வமாக ஆணை அளித்து ஆசிரியர்களை அமர்த்த வேண்டும். இத்தகைய மாற்று பணிக்கு ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்று பணியில் அமர்த்தப்பட்டு பள்ளிக்கு செல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்க வேண்டும். 


இரு நாட்களிலும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்பவர் பட்டியலை காலை 10 மணிக்குள் இயக்குநருக்கு இமெயில் மூலம் அனுப்ப வேண்டும். போராட்ட தினங்களில் பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு சுமூகமான சூழ்நிலை நிலவும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உதவி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள் முழு பொறுப்பேற்று தமது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு