Skip to main content

பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபடும் கிராமங்கள், பள்ளிகள், சுயஉதவிகுழுக்களுக்கு பரிசு

தமிழ்நாட்டினை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு உதவியாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதில், மாநிலத்தில் சிறந்து விளங்கும் கிராமங்கள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் மூன்று சிறந்த பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக இருக்க வேண்டும், பசுமையான, சுத்தமான முன்னோடி கிராமமாக இருக்க வேண்டும். மழைநீர் சேகரித்தல், சூரிய சக்தி தகடுகள் நிறுவுதல், மரம் வளர்த்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கிராமங்களாக இருக்க வேண்டும். முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.சிறந்த சுயஉதவிக்குழுக்கள், தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பதில் முக்கிய பங்காற்றியிருத்தல் வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வுப்பணிகள், துணிப்பைகள், காகிதப்பைகள், காகிதக்குவளைகள், சணல் பைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தல் போன்ற சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். 


முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.பசுமையான, சுத்தமான பள்ளிகள், பிளாஸ்டிக் இல்லாத பசுமை மற்றும் சுத்தமான பள்ளிகளாக இருக்க வேண்டும். கருத்தரங்குகள், நடைப்பயணம், பேரணி, முகாம், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். முதல்பரிசு ரூ.5 லட்சம், 2ம் பரிசு ரூ.3 லட்சம், 3ம் பரிசு ரூ.2 லட்சம்.மேலும் தகவல்களை www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா