Skip to main content

நாளை உள்ளிருப்பு போராட்டம் : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (25ம் தேதி) உள்ளிருப்பு போராட்டமும், நாளை மறுநாள், அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்போவதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. மாநில பொதுச்செயலர் ரெங்கராஜன், திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2006ல், ஆறாவது சம்பளக்குழு அமல் படுத்தப்பட்டது; அதன்படி, தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு, 13,500 ரூபாய், சம்பளமாக வழங்க வேண்டும்; ஆனால், 8,000 ரூபாய் தான் வழங்கப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்த, முதல்வர் ஜெயலலிதா, "ஆறாவது சம்பளக்குழு முரண்பாடுகளை களைவேன்' என்றார். இதற்காக, மூவர் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது, கோரிக்கை நிறைவேற்ற, கால அவகாசம் வேண்டும் என்கின்றனர். ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை, ஒரு நாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தமும், 26ம் தேதி, அடையாள வேலை நிறுத்தமும், கூட்டணி சார்பில் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன