Skip to main content

நாளை உள்ளிருப்பு போராட்டம் : தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (25ம் தேதி) உள்ளிருப்பு போராட்டமும், நாளை மறுநாள், அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தப்போவதாக, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது. மாநில பொதுச்செயலர் ரெங்கராஜன், திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த, 2006ல், ஆறாவது சம்பளக்குழு அமல் படுத்தப்பட்டது; அதன்படி, தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு, 13,500 ரூபாய், சம்பளமாக வழங்க வேண்டும்; ஆனால், 8,000 ரூபாய் தான் வழங்கப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்த, முதல்வர் ஜெயலலிதா, "ஆறாவது சம்பளக்குழு முரண்பாடுகளை களைவேன்' என்றார். இதற்காக, மூவர் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது, கோரிக்கை நிறைவேற்ற, கால அவகாசம் வேண்டும் என்கின்றனர். ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை, ஒரு நாள் உள்ளிருப்பு வேலை நிறுத்தமும், 26ம் தேதி, அடையாள வேலை நிறுத்தமும், கூட்டணி சார்பில் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா