பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நாளை துவங்குகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் உள்ளன. அதில் இடம் பெற்றுள்ள தலைமை ஆசிரியர், குழுத் தலைவர், பெற்றோர்களுக்கு அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தொடர்பாக மூன்று நாள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதில் பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியின் அடிப்படை வசதியை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல், மாணவர்களின் இடைநிற்றலை தவிர்த்தல், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் சிறப்பம்சங்களைக் கொண்டு வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...
Comments
Post a Comment