Skip to main content

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி

சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பயிற்சியை சனிக்கிழமை தொடங்கிவைத்து பேசுகிறார் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன்

.சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்காக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் இந்தப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார். மொத்தம் 40 நாள்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது

இதில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை வரை மாநிலம் முழுவதும் 652 பேர் பதிவு செய்துள்ளனர். சென்னையில் 250 பேர் பதிவு செய்துள்ளனர். வரும் நாள்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்தப் பயிற்சியில் மேலும் இணைவார்கள் என எதிர்பார்ப்பதாக கண்ணப்பன் கூறினார்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் மார்ச் 5-ம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தேர்வை எழுதுவோருக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கிலம், உளவியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம் ஆகிய பாடங்கள் தொடர்பாக இந்தப் பயிற்சியில் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன. கல்லூரி விரிவுரையாளர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், பாட வல்லுநர்கள் பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் உத்ராபதி, பிரசன்னகுமார் ஆகிய இரண்டு பார்வையற்ற மாற்றுத் திறனுடைய விரிவுரையாளர்கள் இந்த தேர்வர்களுக்காக பயிற்சி அளிக்க தாமாகவே முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயிற்சி நடைபெறும் 40 நாள்களுக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உணவும், தேநீர் மற்றும் சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் இணைய விரும்பும் மாற்றுத் திறனாளிகள் அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களையோ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களையோ அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்கள் உமா, ஸ்ரீதேவி, சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ஆர்.ஐயப்பன் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு