Skip to main content

வட்டி செலுத்தாவிடில் கல்விக் கடன் மறுப்பா? : ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம்

"வங்கியில் வாங்கிய கல்விக்கடனுக்கு வட்டி கட்டாவிட்டால், தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது, தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம். 30 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால், ரிசர்வ் வங்கியை அணுகலாம்,'' என, சென்னை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.
கல்லுாரிகளில் பயில்வதற்கு, நான்கு லட்சம் ரூபாய் வரை, கல்விக்கடன் பெறுவதற்கு சொத்துப் பிணையம் தேவையில்லை. வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் அசலை, படித்து முடித்த ஓராண்டில் அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்தில் இருந்து செலுத்த வேண்டும். மாதா மாதம் வட்டி கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை. அதேபோல, முதல் தலைமுறையைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் பட்டதாரிகளுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் நான்கரை லட்ச ரூபாய்க்குள் இருந்தால், வட்டி மானியம் உண்டு.இவை அனைத்தையும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் படி, அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும். ஆனால், சில வங்கிகளில், கல்விக்கடனை மாதந்தோறும் கட்டினால் தான், அடுத்த செமஸ்டருக்கான கல்விக்கடன் தர முன்வருகின்றனர். சில மேலாளர்கள், கடனில் குறிப்பிட்ட சதவீதத்தொகையை, வங்கியில் டெபாசிட் செய்யச் சொல்கின்றனர். இன்சூரன்ஸ் பிடிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்துகின்றனர். முதல் தலைமுறை தொழிற்கல்வி பட்டதாரிகள் வட்டி கட்ட வேண்டியதில்லை என்றாலும், வட்டி கட்டினால் தான், கடன் தருவேன், என பிடிவாதம் செய்கின்றனர்.
இந்த வார்டில் உள்ளவர்களுக்கு, இந்த வங்கி என, பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. வார்டு மாற்றி வந்ததாக, குழப்பி, கடன் அனுமதி தர, காலம் தாழ்த்துகின்றனர். இதனால் கல்விக்கடன் பெறுவதற்குள், பெற்றோர், மாணவர்கள் "ரத்தக்கண்ணீர்' வடிக்கின்றனர்.இதுகுறித்து, ரிசர்வ் வங்கி சென்னை மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறுகையில், ""கிளை மேலாளர்கள், வட்டி கட்ட வற்புறுத்தினாலோ, கடன்தர காலம் தாழ்த்தினாலோ, அந்தந்த வங்கிகளின் தலைமை அலுவலக உயரதிகாரிக்கு புகார் செய்யலாம். இந்த புகாருக்கு, 30 நாட்களுக்குள் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களது குறைதீர்ப்பாளர் மையத்திற்கு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.


முகவரி: குறைதீர்ப்பாளர் மையம், ரிசர்வ் வங்கி, ராஜாஜி தெரு, போர்ட் கிளேசியஸ், சென்னை.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு