Skip to main content

மலைப்பகுதி ஊழியர்களுக்கு பணிப்படி உயர்வு

மலைப்பகுதியில் பணிபுரியும், அரசு ஊழியர்களுக்கு, பணிப்படி மற்றும் குளிர்காலப் படியை, உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில்நடந்த, கலெக்டர் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதா, "மலைப்பகுதியில் பணிபுரியும், அரசு ஊழியர்களுக்கு, மலை பணிப்படியாக மாதம், 1,500 ரூபாய், குளிர்காலப் படியாக, 500 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்தார்.
அதன்படி, மலையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கேற்ப, 900 ரூபாயில் இருந்து, 1,500 ரூபாய் வழங்கவும், குளிர்காலப் படியாக, கடல் மட்டத்தில் இருந்து, 1,000 மீட்டர் உயரத்தில் இருந்து, 1,499 மீட்டர் உயரம் உள்ள, மலைப்பகுதியில் பணிபுரிவோருக்கு, அதிகபட்சமாக மாதம், 450 ரூபாய்; 1,500 மீட்டர் உயரத்திற்கு மேல் வசிப்÷ பாருக்கு, அதிகபட்சமாக மாதம், 500 ரூபாய், உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு