Skip to main content

தேசிய திறனாய்வு தேர்வு: கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு

பல மாவட்டங்களில், கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக, இன்று காலை, 10:00 மணிக்கு, தேசிய திறனாய்வு தேர்வை நடத்த, தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த தேர்வை, 1.6 லட்சம் பேர் எழுத இருந்தனர். கடைசி நேரத்தில், கேள்வித்தாள் அச்சிடப்பட்டதால், அவை, நேற்றிரவு வரை, தேர்வு மையங்களுக்கு சென்று சேரவில்லை. இதனால், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்க இருந்த தேர்வை, பிற்பகல், 2:00 மணிக்கு தள்ளிவைத்து, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த விவரம், முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக, இன்று காலை, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி