Skip to main content

தேசிய திறனாய்வு தேர்வு: கேள்வித்தாள் இல்லாததால் தேர்வு நேரம் மாற்றியமைப்பு

பல மாவட்டங்களில், கேள்வித்தாள் கட்டுகளை ஏற்றிய வாகனங்கள், குறிப்பிட்ட மையத்திற்கு செல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு, இன்று காலை, நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு, பிற்பகல், 2:00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக, இன்று காலை, 10:00 மணிக்கு, தேசிய திறனாய்வு தேர்வை நடத்த, தேர்வுத் துறை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த தேர்வை, 1.6 லட்சம் பேர் எழுத இருந்தனர். கடைசி நேரத்தில், கேள்வித்தாள் அச்சிடப்பட்டதால், அவை, நேற்றிரவு வரை, தேர்வு மையங்களுக்கு சென்று சேரவில்லை. இதனால், இன்று காலை, 10:00 மணிக்கு நடக்க இருந்த தேர்வை, பிற்பகல், 2:00 மணிக்கு தள்ளிவைத்து, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்த விவரம், முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக, இன்று காலை, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்