Skip to main content

பொதுத் தேர்வு நேரத்தில் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும்: அமைச்சர் எச்சரிக்கை

பொதுத் தேர்வு நேரத்தில் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்றும் இல்லையேல் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
சிகரத்தை நோக்கி
புதுவை மாநிலம் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி துறை சார்பில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வல்லவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் கோமதி முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அதிகாரி கலைச்செல்வன் வரவேற்றார்.
அமைச்சர் தியாகராஜன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
பேட்டி
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு எடுப்பது, தவறானது. விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்களா? குறித்த நேரத்தில் வேலைக்கு வருகிறார்களா? என்பதை கல்வி துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கண்காணிப்பார்கள்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க, புதிதாக ஆசிரியர்களை பணியில் அமர்த்த ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
பால் தட்டுப்பாடு
புதுவையில் பால் தட்டுப்பாடு இருந்து வருவதால், பள்ளிகளில் காலையில் வழங்கப்படும் ரொட்டி-பால் திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாரந்தோறும் இரண்டு முறை சத்துணவில் முட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒருமுறைதான் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த குறைபாட்டை போக்க முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு