Skip to main content

பொதுத் தேர்வு நேரத்தில் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும்: அமைச்சர் எச்சரிக்கை

பொதுத் தேர்வு நேரத்தில் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்றும் இல்லையேல் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
சிகரத்தை நோக்கி
புதுவை மாநிலம் பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி துறை சார்பில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிகரத்தை நோக்கி என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வல்லவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் கோமதி முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அதிகாரி கலைச்செல்வன் வரவேற்றார்.
அமைச்சர் தியாகராஜன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்வி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
பேட்டி
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் தொடர் விடுப்பு எடுப்பது, தவறானது. விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்களா? குறித்த நேரத்தில் வேலைக்கு வருகிறார்களா? என்பதை கல்வி துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கண்காணிப்பார்கள்.
ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க, புதிதாக ஆசிரியர்களை பணியில் அமர்த்த ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
பால் தட்டுப்பாடு
புதுவையில் பால் தட்டுப்பாடு இருந்து வருவதால், பள்ளிகளில் காலையில் வழங்கப்படும் ரொட்டி-பால் திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வாரந்தோறும் இரண்டு முறை சத்துணவில் முட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால் ஒருமுறைதான் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த குறைபாட்டை போக்க முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா