Skip to main content

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு: விடுமுறையில் செல்ல ஊழியர்களுக்கு அரசு கட்டுப்பாடு

அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக, விடுமுறையில் செல்லும் போது, "விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்' என, பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், பணிக்காலத்தில் மேற்படிப்பு அல்லது பணி தொடர்பாக, படிக்க விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு, விடுமுறையில் செல்லும் போது, கடன் மற்றும் பணம் செலுத்த வேண்டியிருந்தால், அதை செலுத்துவதாக உத்தரவாதம் அளித்து, பத்திரம் அளிக்க வேண்டும். இதுதான் தற்போதுள்ள நடைமுறை. ஆனால், சிலர், விடுமுறை முடிந்ததும், பணிக்கு திரும்பாமல், வேறு வேலைக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக, புது அறிவிப்பை ஒன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, படிப்புக்காக விடுமுறையில் செல்பவர்கள், "விடுமுறை முடிந்ததும், மீண்டும் பணியில் சேர்வேன்' என, உத்தரவாதம் அளித்து பத்திரம் அளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. இதன்படி, அனுமதிக்கப்பட்ட விடுமுறை முடிந்ததும், அடுத்த நாளே, ஊழியர் பணிக்கு சேர வேண்டும்' என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்