Skip to main content

கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில்எந்த மாறுதலும் ஏற்படவில்லை-தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங்

கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார். 
அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்கும் அமைப்பாக இந்த ஆணையம்செயல்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்க வந்த அவர் கூறியது: 
கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளை வலுப்படுத்துவது இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம். பணக்காரக் குழந்தைகள் தனியார்பள்ளிகளுக்கும், ஏழைக் குழந்தைகள் அரசு பள்ளிகளுக்கும் செல்லும் நிலையை மாற்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசு பள்ளிகளில்கல்வி வழங்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனால், இந்த நோக்கம் நாடு முழுவதும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அரசு பள்ளிகளை வலுப்படுத்தும் 
நடவடிக்கைகளை விரைந்து செய்ய வேண்டியுள்ளது. பொருளாதார, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை இதன் மூலமே களைய முடியும். 

தனியார் பங்கேற்புடன் மாதிரிப் பள்ளிகள்: தனியார் பங்கேற்புடன் கூடியமாதிரிப் பள்ளிகள் என்கிற திட்டத்தை நான் எதிர்க்கிறேன்.மாணவர்களுக்கு கல்வி வழங்குவது என்பது முழுமையாக அரசின்கடமையாகும். தனியாரின் கடமையல்ல. ஏனென்றால், அவர்கள் லாபம் ஈட்டும் நோக்கத்தில்தான் கல்வி நிறுவனங்களை தொடங்க முன்வருகின்றனர். 
மத்திய அரசின் கடமையல்ல: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவது மத்திய அரசின் கடமையல்ல. இந்தக் குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லவில்லையென்றாலும்அரசு பள்ளிகளுக்குச் செல்வார்கள். எனவே, அவர்களுக்குச் செலவிடும் தொகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. 
இந்தச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு மத்திய அரசுதான் கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என மாநில அரசுகள் கூறுகின்றன. இதில் இரு தரப்பிடமும் நியாயம் இருக்கிறது. இதை அவர்கள் விவாதித்து முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு கட்டணத்தைப் பெற முடியவில்லை என்றாலும் தனியார் பள்ளிகள் இந்தப் பிரிவின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். அது அவர்களின் சமூகக் கடமையும் கூட. 
அதிக புகார்கள்: குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பாக இப்போது ஏராளமான புகார்கள் வருகின்றன. இதன் மூலம் இந்தக் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக பொருள் இல்லை. இப்போது இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்தும் பாலியல் கொடுமைகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிகமான புகார்கள் வருகின்றன. பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என இரண்டு மாணவர்கள் கூட எங்கள் ஆணையத்துக்குப் புகார்களை அனுப்பியுள்ளனர் என்றார் அவர்.

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்