Skip to main content

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 937 இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


துறைவாரியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
01. உயிரியல் - 41 (பொது- 19, ஒபிசி- 9, எஸ்சி- 13).
02. வேதியியல் - 51 (பொது- 20, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 15).
03. வணிகவியல் - 25 (பொது- 8, ஒபிசி- 8, எஸ்சி- 5, எஸ்டி- 4).
04. பொருளியல் - 76 (பொது- 25, ஒபிசி- 12, எஸ்சி- 29, எஸ்டி- 10).
05. ஆங்கிலம் - 53 (பொது- 40, எஸ்சி- 5, எஸ்டி- 8).
06. புவியியல் -33 (பொது- 17, ஒபிசி- 6, எஸ்சி- 6, எஸ்டி- 4).
07. இந்தி -51 (பொது- 37, எஸ்சி- 6, எஸ்டி- 8).
08. வரலாறு - 41 (பொது- 31, எஸ்சி- 8, எஸ்டி- 2).
09. கணிதம் - 84 (பொது- 14, ஒபிசி- 19, எஸ்சி- 27, எஸ்டி- 24).
10. இயற்பியல் - 59 (பொது- 24, ஒபிசி- 10, எஸ்சி- 6, எஸ்டி- 19).

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அத்துடன் பி.எட்., பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பயிற்றுவிக்கும் திறன் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 மற்றும் தர ஊதியம் 4,800.
வயதுவரம்பு: 31.01.2014 தேதியின்படி 40க்குள். இருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் விவரம்:
01. ஆங்கிலம் - 88 (பொது- 32, ஒபிசி- 10, எஸ்சி- 13, எஸ்டி- 33).
02. இந்தி - 65 (பொது- 45, எஸ்சி- 12, எஸ்டி- 8).
03. கணிதம் - 179 (பொது- 62, ஒபிசி- 15, எஸ்சி- 45, எஸ்டி- 57).
04. அறிவியல் - 53 (பொது- 25, ஒபிசி- 1, எஸ்சி- 7, எஸ்டி- 20).
05. சோஷியல் ஸ்டடீஸ் - 38 (பொது- 26, ஒபிசி- 1, எஸ்சி- 4, எஸ்டி- 7).

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் பி.எட். பட்டம் பெற்றிருப்பதுடன் மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.1.2014 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 
எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: அகில இந்திய அளவில் நடைபெறும் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுவார்கள். நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பதிவிறக்கம் செய்து யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பணமாக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி மறஅறும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.navodaya.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2014.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.navodaya.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு