Skip to main content

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பம்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்கள் மார்ச் 25-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தை ரூ.50 கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. பி.எட். படிப்பு முடித்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் இரண்டாம் தாள் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.
பார்வையற்றவர்களுக்கு மட்டுமே: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை பிற மாற்றுத் திறனாளிகளும் எழுதலாம் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால், இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டுமே எழுதும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாகவே இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா