Skip to main content

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: மார்ச் 5 முதல் விண்ணப்பம்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்கள் மார்ச் 25-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தை ரூ.50 கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. பி.எட். படிப்பு முடித்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் இரண்டாம் தாள் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது.
பார்வையற்றவர்களுக்கு மட்டுமே: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை பிற மாற்றுத் திறனாளிகளும் எழுதலாம் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால், இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டுமே எழுதும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாகவே இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்