Skip to main content

அரசு ஊழியருக்கு ஃபிப்., 28ல் மாவட்ட விளையாட்டு போட்டி

பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது வெளியிட்ட அறிக்கை:

ஆண்களுக்கு தடகள போட்டிகளான 100, 200, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 *100 மீட்டர் தொடர் ஓட்டம், பெண்களுக்கு 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 * 100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டி, குழுப்போட்டிகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, கூடைப்பந்து, கபடி, கையுந்து பந்து போட்டிகளும், ஆண்களுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது.

ஃபிப்., 28ம் தேதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி, ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளும், மார்ச் 1ம் தேதி தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து, டென்னிஸ் போட்டிகளும் நடக்க உள்ளது.

ஒரு அரசு ஊழியர், ஒரு தனிநபர் போட்டியிலும் (தடகளம்), ஒரு குழுப்போட்டியிலும் பங்கேற்கலாம். தனிநபர் போட்டியில் முதலிடம் பிடிக்கும் நபர்களும், குழுப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் நபர்களும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், தங்களது அலுவலகம் மூலம் சிறப்பு தற்செயல் விடுப்பு பெற்று வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனி நபர் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கும், குழுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் இரண்டு இடங்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தனி நபர் மற்றும் குழுப்போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்போருக்கும், அணி மேலாளர்கள் 15 நபர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படும். பள்ளி கல்வி துறையில் உடற்கல்வி ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களும், அலுவலக உதவியாளர்களும், போலீஸ் துறையில் போலீஸை தவிர அலுவலக உதவியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

மத்திய அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் மற்றும் கார்ப்பரேசன், கூட்டுறவு ஊழியர்கள் கலந்து கொள்ளக்கூடாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 95000-74838 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

போட்டிகளில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் தங்களது பெயரை ஃபிப்., 26ம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா