Skip to main content

ப்ளஸ் 2 விடைத்தாள்கள்: 16ம் எண் ஊசியால் ஒரு அங்குலத்துக்கு 6 தையல் போட வேண்டும்

தமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்காக, பார்கோடு எண் அமைந்த, மேல் தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; மேல் தாளுடன், விடைத்தாள்களை, 16ம் எண் ஊசியில், வெள்ளை நூலால், ஒரு அங்குலத்துக்கு, ஆறு தையல் விழும் வகையில் தைக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், ப்ளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ம் தேதி தொடங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ, மாணவியர், தேர்வெழுத உள்ளனர். நடப்பு 

கல்வியாண்டில், தேர்வு துறை, பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தேர்வுக்கு தேவையான விடைத்தாள், மாணவர்களின் விபரம் கொண்ட, மேல் தாள், கோட்டுரு தாள் (கிராப் ஷீட்) மற்றும், வரைபடம் உள்ளிட்ட, தேர்வுக்கான பொருட்கள், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ப்ளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாளில், ஒவ்வொரு பாடத்துக்கும் தகுந்தாற் போல், கோட்டுரு மற்றும் வரைபடம் உள்ளித்த தாள்கள், தனித்தனியே வழங்கப்பட்டுள்ளன. 


அதே போல், மாணவர்களின் பதிவெண் மற்றும் விபரங்களை கொண்ட, "டாப் ஷீட்' வழங்கப்பட்டுள்ளது.
விடை தாள்களுக்குள் வித்தியாசம் வந்து விடாதபடி, தையற்காரர்களை அமர்த்தி, 16ம் எண் ஊசி மூலம், ஒரு அங்குலத்துக்கு, ஆறு தையல் விழும்படி, வெள்ளை நூலில், டாப் ஷீட்டுடன், விடைத்தாள்களை தைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேல் தாள் கிழிந்து விட்டால், கல்வி துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு, மீண்டும், மேல் தாளை பெற்றுக் கொள்ளலாம். மொத்தம், 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், மேல் தாள், மதிப்பெண் குறிப்பிடுவதற்கான பட்டியல் போக, மீதமுள்ள, 36 பக்கங்களில், மாணவர்கள் தேர்வெழுதலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு