Skip to main content

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்தும் பணி 10 நாட்களில் முடியும்

நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, 10 நாட்களில் முடிக்குமாறு, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. நடப்பாண்டு, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், பல்வேறு மாற்றங்களை, தேர்வுத் துறை செய்துள்ளது. தற்போது, விடைத்தாள்கள் திருத்தும் பணியையும், விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக, 32 மாவட்டங்களில், 66 மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன; கடந்தாண்டை விட, 36 மையங்கள் அதிகரித்து உள்ளன. திருத்தும் பணி துவங்கி, 10 நாட்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கடந்த ஆண்டு, விடைத்தாள்களில், மறுகூட்டல் நடத்தியதில், சில குளறுபடிகள் நடந்தது. இதை தவிர்க்க, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடம் எடுத்த ஆசிரியர்களை மட்டுமே வைத்து, விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா