Skip to main content

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்கிறது...

மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உடனடியாக இது குறித்து அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி வரும் வெள்ளிக்கிழமை(28-02-14) அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் 10% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டால் அது 100% மாக உயரும்.


ஜனவரி முதல் முன்தேதியிட்டு இந்த உயர்வு அமல் படுத்தப்படும். அகவிலைப்படி உயர்வால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப் படுவதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருமுன் அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு என்பது வழக்கமான நடைமுறை என்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இதற்கு பொருந்தாது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா