Skip to main content

10ம் வகுப்பு செய்முறை தேர்வு ஒத்திவைப்பு: தேர்வு துறை

தேர்வுத் துறை இணையதளத்தில், 10ம் வகுப்பு, "நாமினல்ரோல்' வெளியிடப்படாததால், இன்று நடக்கவிருந்த, செய்முறை தேர்வு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில், 10ம் வகுப்புக்கு, சமச்சீர்கல்வி முறையில், அறிவியல் செய்முறை தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச்,
3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன், 10ம் வகுப்பு செய்முறை தேர்வை முடித்து விடும் நோக்கில், பிப்., 21ம் தேதி முதல், செய்முறை தேர்வை நடத்த, தேர்வுத் துறை உத்தரவிட்டது. செய்முறை தேர்வு நடத்துவதற்கான, கண்காணிப்பாளர் பணிக்கு, வேறு பள்ளிகளில் இருந்து, ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு, "ட்யூட்டி ஆர்டர்' வழங்கப்பட்டன. ஆனால், தேர்வுத் துறை, "நாமினல்ரோல்' வெளியிடவில்லை; இதனால், மாணவர்களுக்கு, பதிவு எண் மற்றும் "ஹால் டிக்கெட்' வழங்க முடியாத, சூழல் உருவாகியது. இதையடுத்து, 10ம் வகுப்பு செய்முறை தேர்வு, ஒத்தி வைக்கப்படுவதாக, நேற்று மாலை, கல்வித் துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வாய்மொழி உத்தரவிட்டனர்.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இன்று காலை, சேலம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு செய்முறை தேர்வு துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. தேர்வுக்கு தயாரான நிலையில், நாமினல் ரோல், கடைசி நேரத்தில், ஆன் - லைனில் பதிவேற்றம் செய்யப்படலாம் என, ஆசிரியர்களுக்கு, "ரிலிவிங் ஆர்டர்' கொடுத்துவிட்டோம். தற்போது, திடீரென, செய்முறை தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால், 
ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா