Skip to main content

பி.எஃப். வட்டியில் 0.25% உயர்த்த அரசு பரிசீலனை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (ஈ.பி.எஃப்) வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் கொடிகுன்னில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் புதன்கிழமை பதிலளிக்கையில், ""2013-14-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.75 சதவீதமாக நிர்ணயிக்கும்படி ஈ.பி.எஃப். அமைப்பை நிர்வகித்து வரும் மத்திய பொறுப்பாளர்கள் வாரியம் (சி.பி.டி) பரிந்துரை செய்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டைவிட (2012-13) 0.25 சதவீதம் அதிகம்.
தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வருவாயின் அடிப்படையில்தான் அதற்கான வட்டி விகிதத்தை முடிவு செய்ய முடியும்.
அந்த வகையில் இந்த நிதியாண்டில் கிடைத்துள்ள வருவாயின் அடிப்படையில் 8.75 சதவீத வட்டி விகிதத்தை சி.பி.டி. பரிந்துரை செய்துள்ளது'' என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா