Skip to main content

பி.எஃப். வட்டியில் 0.25% உயர்த்த அரசு பரிசீலனை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (ஈ.பி.எஃப்) வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் கொடிகுன்னில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் புதன்கிழமை பதிலளிக்கையில், ""2013-14-ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டியை 8.75 சதவீதமாக நிர்ணயிக்கும்படி ஈ.பி.எஃப். அமைப்பை நிர்வகித்து வரும் மத்திய பொறுப்பாளர்கள் வாரியம் (சி.பி.டி) பரிந்துரை செய்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டைவிட (2012-13) 0.25 சதவீதம் அதிகம்.
தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வருவாயின் அடிப்படையில்தான் அதற்கான வட்டி விகிதத்தை முடிவு செய்ய முடியும்.
அந்த வகையில் இந்த நிதியாண்டில் கிடைத்துள்ள வருவாயின் அடிப்படையில் 8.75 சதவீத வட்டி விகிதத்தை சி.பி.டி. பரிந்துரை செய்துள்ளது'' என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்