Skip to main content

LATEST RECRUITMENTS AND EXAM

என்.ஹெச்.டி.சி. நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணி
மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் என்.ஹெச்.டி.சி நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் அல்லது எலெக்ட்ரிக்கல் துறையில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 18
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2014
விவரங்களுக்கு: www.nhdcindia.com



என்.ஹெச்.பி.சி. நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணி
நேஷனல் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (என்.ஹெச்.பி.சி.) நிறுவனத்தில் டிரெய்னி என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ. அல்லது பி.டெக். அல்லது ஏ.எம்.ஐ.இ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 180 (சிவில் - 25, எலெக்ட்ரிக்கல் - 130, மெக்கானிக்கல் - 25)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2014
விவரங்களுக்கு: www.nhpcindia.com


பவர் கிரிட் கார்ப்பரேஷனில் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணி
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம், எலெக்ட்ரிக்கல் துறையில் பி.இ. அல்லது பி.டெக். அல்லது பி.எஸ்சி. (என்ஜினீயரிங்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
காலியிடங்கள்: 132 (ஓ.பி.சி. பிரிவினருக்கு - 35, தாழ்த்தப்பட்டோருக்கு - 20, பழங்குடியினருக்கு - 09, மற்றவர்களுக்கு - 68)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2014
விவரங்களுக்கு: www.powergridindia.com


மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் 120 கான்ஸ்டபிள் பணி
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.5,200 - ரூ.20,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2014
விவரங்களுக்கு: www.cisf.nic.in

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு