பள்ளி கல்வித்துறையின் கீழ் கல்வி தகவல் மேலா ண்மை முறை (இஎம்ஐஎஸ்) என்ற பெயரில் மாணவ மாணவியர் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்கிறது. இதில் அனைத்து வகை மேலாண்மையின் கீழ் இயங்கும் உயர், மேல்நிலை பள்ளி மாணவ மாணவியரின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் 16 இலக்கம் கொண்ட அடையாள எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகைப்படங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தற்போது அனைத்து வகை பள்ளி மாணவர்களின் புகைப்படங்களை ஒன்றியம் மற்றும் மாவட் டம் வாரியாக சம்பந்தப்பட்ட முத ன்மை கல்வி அலுவலர்கள் தொகுத்து அளிக்க வேண்டும். பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் சேகரிக்கப்பட்டுள்ள மாணவ மாணவிகளின் புகைப்படங்களை டிவிடிகளில் பதிவேற்றம் செய்து, வரும் 30ம் தேதி இஎம்ஐஎஸ் மாநில மையத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று அனை த்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...
Comments
Post a Comment