Skip to main content

குழந்தைகளை கவரும் ஆண்ட்ராய்டு ‘எடி’ டேப்லெட்


மெடிஸ் லெர்னிங் நிறுவனம் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு அடிப்படை லெர்னிங் டேப்லெட்டான ‘எடி’ டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9,999 என்று விலையிடப்பட்ட டேப்லெட் 2 முதல் 10 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு இலக்காக உள்ளது. நிறுவனத்தின் படி, ‘எடி’ எடுகேட்டர் செலக்டர் லெர்னிங் கன்டன்ட் (educator selected learning content), கிட் சேஃப் என்வைரான்மென்ட் (kid safe environment) மற்றும் ஹய் குவாலிட்டி ஹார்ட்வேர் (high quality hardware) உடன் வருகின்றது.



மேலும், இது நம்பகமான வலைத்தளங்களின் அணுகலை மட்டும் அனுமதிக்கின்ற கிட் சேஃப் ப்ரவுசர் கொண்டுள்ளது. பெற்றோர்கள் டேப்லெட்டில் தங்கள் குழந்தைகள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றிய விவரமான அறிக்கைகளும் கிடைக்கும். பெற்றோர்களின் தேவை படி ஒவ்வொரு குழந்தைகளின் தொடர்புடைய கன்டன்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மூன்று குழந்தைகள் வரை அவர்களின் விவரக்குறிப்புகளை எடி டேப்லெட்டில் உருவாக்க முடியும். எடி டேப்லெட்டில் 150 க்கும் மேற்பட்ட கல்வி விளையாட்டுகள் உடன் வருகிறது மற்றும் பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இது மொழி, கணிதம், மற்றும் படைப்புத்திறன் உட்பட முக்கிய லெர்னிங் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. எடி விளையாட்டுகள் மூலம் குழந்தைகள், புத்தகங்களை படிக்க, பியானோவை வாசிக்க கற்றுக்கொள்ளவது, கணிதம் பயிற்சி போன்றவவை உள்ளது. டேப்லெட்டில் விளையாட்டுகள் மிகவும் ஈடுபடுதல் மற்றும் வன்முறை இல்லாததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெற்றோர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 50,000 க்கும் மேற்பட்ட கல்வி அப்ளிக்கேஷன்களை அணுக முடியும்.

எடி டேப்லெட் அம்சங்கள், 7 இன்ச் (1024×600) ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 0.3 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. அதன் 3200 mAh பேட்டரி திறன் 4 மணி நேரத்திற்க்கும் அதிகமாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 1.6GHz டூயல் கோர் பிராசசர், ரேம் 1GB, மற்றும் மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள் நினைவகம் உள்ளது. மேலும், டேப்லெட்டில் HDMI போர்ட் உள்ளது. எடி டேப்லெட் eddytablet.com மற்றும் amazon.in வளைதளத்தில் கிடைக்கின்றது.

எடி டேப்லெட் விவரக் குறிப்புகள்:
7 இன்ச் (1024×600) ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
1.6GHz டூயல் கோர் பிராசசர்,
0.3 மெகாபிக்சல் முன் கேமரா,
2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள் நினைவகம்,
ரேம் 1GB,
HDMI போர்ட்,
ஆண்ட்ராய்டு 4.2,
3200 mAh பேட்டரி.

Share !

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு