Skip to main content

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில்,மாநில விளையாட்டுப் போட்டிகள்: மதுரையில் இன்று துவக்கம்


தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜன.,28), மாநில குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் துவங்குகின்றன. ஜன., 30 வரை போட்டிகள் நடக்கின்றன.
வாலிபால், கால்பந்து, கூடைபந்து உட்பட 15 விளையாட்டுக்களின் வீரர், வீராங்கனைகள் 4,500 பேர் மதுரை வருகின்றனர். இவர்கள் 18 பள்ளிகளில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து மதுரை வரும் வீரர், வீராங்கனைகளை வரவேற்க, ரயில்வே ஸ்டேஷன், ஆரப்பாளையம், பெரியார் மற்றும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு அழைத்துவர பள்ளிகளின் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. துவக்கவிழா, ஷட்டில், டென்னிஸ், கூடைபந்து, கபடி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும், மீதி விளையாட்டுகள் பிற பள்ளி மைதானங்களிலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி செய்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் போட்டிகள் நடப்பதாலும், வீரர்கள் தங்க ஏற்பாடு செய்துள்ளதாலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், ஜன., 28 முதல் 30 வரை, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன