Skip to main content

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி:முழுநேர பிஎச்.டி., பட்டதாரிகள் ஏமாற்றம்

உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு, மதிப்பெண்கள் வழங்குவதில், பகுதி நேர, பிஎச்.டி., படித்து, பணிபுரிந்த அனுபவத்திற்காக, கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், முழுநேர படிப்பாக, பிஎச்.டி
., முடித்தவர்கள், ஏமாற்றமடைந்துள்ளனர்.சரிபார்ப்பு:தமிழக அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1,093 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.


இதற்காக, தமிழகத்தில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், விண்ணப்பித்தனர்.அவர்கள், சென்னையில் உள்ள, மூன்று அரசு கல்லுாரிகளில், கடந்த ஆண்டு, நவம்பர் 25ம் தேதி முதல், டிசம்பர், 6ம் தேதி வரை, சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.மொத்த மதிப்பெண்களில், 24 மதிப்பெண்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஒதுக்கப்பட்டது. அதற்கான, மதிப்பெண்கள் பட்டியல், அண்மையில் இணையதளத்தில் வெளியானது.சான்றிதழ் சரி பார்ப்பில், பிஎச்.டி.,முடித்தவர்களுக்கு, 9 மதிப்பெண்களும், பணியாற்றிய அனுபவத்திற்காக, ஆண்டுக்கு, தலா, 2 மதிப்பெண்கள் வீதம், அதிகபட்சமாக, 7.5 ஆண்டுகளுக்கு, 15 மதிப்பெண்கள் என, வரையறுக்கப்பட்டுள்ளன.தனியார் கல்லுாரியில், பேராசிரியர்களாக பணியாற்றும் போதே, பகுதி நேரத்தில், பிஎச்.டி., படிப்பவர்கள் உள்ளனர்.


இதில், ஏதேனும் ஒரு தகுதியை மட்டுமே, மதிப்பெண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, விண்ணப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னணி:ஆனால், தேர்வு வாரியம், அனுபவத்திற்காக, 15 மதிப்பெண்கள் மற்றும் பகுதி நேர, பிஎச்.டி., பெற்றவர்களுக்கு, 9 மதிப்பெண்களும், முழுமையாக வழங்கியுள்ளது.பகுதி நேரமாக, பிஎச்.டி., படித்தவர்களுக்கு, முழு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால், வரிசைப் பட்டியலில், அவர்கள், முன்னணி வகித்துள்ளனர். இதனால், முழுநேர, பிஎச்.டி., படிப்புப் படித்தவர்கள், பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு