Skip to main content

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பிக்கும் குரூப்-பி, குரூப்-சி., குரூப்-டி. அரசு ஊழியர்களுக்கு என்.ஓ.சி. வழங்கும் அதிகாரத்தை பணிநியமன அதிகாரிகளுக்கு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் சரி, அதை புதுப்பித்துக்கொள்வதற்கும் சரி தங்கள் துறைத்தலைவரிடம் தடையின்மை சான்று (என்.ஓ.சி.) வாங்க வேண்டும் என்ற விதி இருந்தது. இதனால், என்.ஓ.சி. பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், காலதாமதத்தை தவிர்க்கவும் ஊழியர்களுக்கு விரைவாக என்.ஓ.சி. வழங்கிடவும் தமிழக அரசு புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, பாஸ்போர்ட் வாங்கவும், ஏற்கெனவே இருக்கும் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கும் விண்ணப்பிக்கும் குரூப்-பி, குரூப்-சி., குரூப்-டி. அரசு ஊழியர்களுக்கு என்.ஓ.சி. வழங்கும் அதிகாரத்தை பணிநியமன அதிகாரிகளுக்கு அளித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் வெளியிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு