Skip to main content

பதிவு எண், புகைப்படத்துடன் 60 லட்சம் விடைத்தாள் : பிளஸ் 2 தேர்வுக்காக அச்சடிப்பு தீவிரம்

பிளஸ் 2 தேர்வுக்காக, மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன், 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி, சென்னையில், மும்முரமாக நடந்து வருகிறது.
பொதுத் தேர்விலும், தேர்விற்குப் பின் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலிலும், எந்த குளறுபடியும் வரக்கூடாது என்பதற்காக, பல புதிய திட்டங்களை, தேர்வுத் துறை அமல்படுத்தி உள்ளது.


வித்தியாசமான விடைத்தாள் : இதில், விடைத்தாளில் செய்யப் பட்டுள்ள மாற்றம், மிகவும் முக்கியமானது. வழக்கமாக, விடைத்தாளின் முதல் பக்கத்தில், பதிவு எண், பெயர், தேர்வு பாடத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், மாணவர், கையால் எழுதுவர்.இதில், மாணவர் எழுத்தில் தவறு, பதிவு எண்களை 
நிரப்புவதில் தவறு என, பல பிரச்னைகள், தொடர்ந்து வந்தன. இந்த பிரச்னைகளை, முற்றிலும் நீக்கும் வகையில், வரும் பொதுத் தேர்வில், புதிய முறையில், விடைத்தாள் வழங்கப்படுகிறது.
அதன்படி, வெற்று விடைத்தாள் கட்டின் முதல் பக்க தாளில், மாணவர், வெறும், கையெழுத்து மட்டுமே போட வேண்டியிருக்கும். மற்றபடி, மாணவரின் புகைப்படம், பதிவு எண், அன்றைய தேர்வு பாடம், எந்த மீடியம், தேர்வு மையத்தின் பெயர், தேதி உட்பட அனைத்து தகவல்களும், ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு இருக்கும்.
இந்த முதல் பக்கத்தை, தேர்வுக்கு சில நாட்களுக்கு முன், அந்த தேர்வு மையங்களில் வைத்து, விடை எழுதுவதற்கான பக்கங்களுடன் சேர்த்து, தைக்கப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


விரைவில் வினியோகம் : இதற்காக, 60 லட்சம் விடைத்தாள்களுக்கு, முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி, சென்னையில் நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்வு மையம் வாரியாக, அச்சடிக்கப்பட்ட விடைத்தாள், விரைவில் அனுப்பப்பட உள்ளது. இதேபோல், செய்முறை தேர்வு விவரங்களை பதிவு செய்யும் பணி, தற்போது, சாதாரண முறையில் நடக்கிறது. இதனால், செய்முறை தேர்வு பாடம், அவற்றுக்கான மதிப்பெண் விவரங்களை பதிவு செய்தல் போன்றவற்றிலும் தவறுகள் நடக்கின்றன. இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு படிவத்தை தயார் செய்து, கம்ப்யூட்டர் மூலம், உரிய விவரங்களை பதிவு செய்யும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கான முடிவு, விரைவில் எடுக்கப்படும் என, தேர்வுத் துறை 
வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு