Skip to main content

வடக்கு ரயில்வேயில் 5,679 காலியிடங்கள்

வடக்கு ரயில்வேயில் 5,679 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயின்கீழ் இயங்கி வரும் வடக்கு ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பாயிண்ட்ஸ்மேன், கலாசி உதவியாளர், கேட்மேன், டிராக்மேன், கேரேஜ் கிளீனர், டிஎஸ்எல் கலாசி, துப்புரவுப் பணியாளர், சமையலர், மருத்துவமனை உதவியாளர் ஆகிய பணிகளில் ஏதேனும் ஒரு பணிக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


காலியிடங்கள்: பாயிண்ட்ஸ்மேன் - 688, கேட்மேன் - 262, கலாசி உதவியாளர் - 1,895, டிராக்மேன் - 2,529, கேரேஜ் கிளீனர் - 272, டிஎஸ்எல் கலாசி - 22, துப்புரவுப் பணியாளர் - 5, சமையலர் - 2, மருத்துவமனை உதவியாளர் - 4.

வயது வரம்பு: 33-க்குள் (ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்)

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

விண்ணப்பிப்பது எப்படி?:

விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். விண்ணப்பப் படிவத்தில் நீலம் அல்லது கறுப்பு நிற பால் பாயிண்ட் பேனாவால் அடித்தல், திருத்தல் இல்லாமல் எழுதவேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

இணையதளத்தில் இருந்து பிரிண்ட் செய்த சலானைப் பயன்படுத்தி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 3311403687 என்ற அக்கவுண்ட் எண்ணில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் அல்லது ‡NEFT Code No - CBINO280311 என்ற எண்களைப் பயன்படுத்தி வேறு வங்கியிலும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Lajpat Nagar - I, New Delhi – 110024 என்கிற முகவரிக்கு இந்தியன் போஸ்டல் ஆர்டரும் அனுப்பலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கட்டணம் செலுத்திய சலான் அல்லது போஸ்டல் ஆர்டர் ரசீதையும், பத்தாம் வகுப்புச் சான்றிதழ் நகலையும், சாதிச் சான்றிதழ் நகலையும் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Assistant Personnel Officer(RRC), Railway Recruitment Cell, Lajpat Nagar - I, New Delhi - 110 024.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.02.2014

விவரங்களுக்கு: www.rrcnr.org/

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு