Skip to main content

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 3-வது கட்ட கலந்தாய்வு- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

குரூப்-4 தேர்வில் சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவிகளில் காலியாக உள்ள 165 இடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு பிப்ரவரி 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) செயலாளர் மா.விஜயகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
2007-2008 மற்றும் 2012-2013ம் ஆண்டுகளுக்கான குரூப்-4 பணிகளிடங்களை நிரப்புவதற்கு கடந்த 7.7.2012 அன்று தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3),பதவியில் எஞ்சியுள்ள காலியிடங்களில் 39 காலிப் பணியிடங்கள் தவிர 165 காலியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 3, 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள், கலந்தாய்வு நாள், நேரம் ஆகிய விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளன. மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இது குறித்த அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலம் தனியாக அனுப்பப்பட்டு இருக்கிறது.

கலந்தாய்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்கள், தமிழ்வழியில் 10-ம் வகுப்பு படித்திருந் தால் பள்ளி தலைமை ஆசிரியரிட மிருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். தமிழ் வழி படிப்பு குறித்து விண்ணப்பத்தில் ஏற் கெனவே குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அச்சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.பிப்ரவரி 3-ம் தேதி நடை பெறும் கலந்தாய்வுக்குவராத விண்ணப்பதாரர்களால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் 87 பேரின் பதிவுஎண்கள் வெளியிடப் பட்டுள்ளன. அவர்கள் மதிப்பெண்மற்றும் இடஒதுக்கீட்டின்படி அப்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப பிப்ரவரி 4-ல் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். கலந் தாய்வுக்கு வர தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு