Skip to main content

பிளஸ் 2 மாணவர்கள் பதிவெண் பட்டியல்: தலைமையாசிரியர்களுக்கு கெடு

"பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட "நோடல்" மையங்களில் ஒப்படைக்க வேண்டும்" என, மதுரை முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: இப்பட்டியல் ஜன.,17ல் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டம் வாரியாக அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட "பயனர் பெயர்" மற்றும் "கடவுச்சொல்" மூலம் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் பட்டியலை தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, பெயர், பதிவெண் உட்பட பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. மாணவர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய இன்று (ஜன.,20) கடைசி நாள்.
சரிபார்க்கப்பட்ட பட்டியலை ஜன.,23க்குள் கல்வி மாவட்ட நோடல் மையங்களான சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (மதுரை ), ஒத்தக்கடை பெண்கள் மேல்நிலைப் பள்ளி (மேலூர்), உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி (உசிலம்பட்டி) ஆகியவற்றில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் பத்தாம் வகுப்பிற்கான (தமிழ் தவிர பிற மொழிப் பாட மாணவர்கள்) தேர்வுக் கட்டணம் மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஜன.,23க்குள் வங்கிகளில் செலுத்தி அதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களிடம் ஜன.,24க்குள் ஒப்படைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு