Skip to main content

பிளஸ் 2 மாணவர்கள் பதிவெண் பட்டியல்: தலைமையாசிரியர்களுக்கு கெடு

"பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட "நோடல்" மையங்களில் ஒப்படைக்க வேண்டும்" என, மதுரை முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: இப்பட்டியல் ஜன.,17ல் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டம் வாரியாக அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட "பயனர் பெயர்" மற்றும் "கடவுச்சொல்" மூலம் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் பட்டியலை தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, பெயர், பதிவெண் உட்பட பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. மாணவர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய இன்று (ஜன.,20) கடைசி நாள்.
சரிபார்க்கப்பட்ட பட்டியலை ஜன.,23க்குள் கல்வி மாவட்ட நோடல் மையங்களான சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (மதுரை ), ஒத்தக்கடை பெண்கள் மேல்நிலைப் பள்ளி (மேலூர்), உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி (உசிலம்பட்டி) ஆகியவற்றில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் பத்தாம் வகுப்பிற்கான (தமிழ் தவிர பிற மொழிப் பாட மாணவர்கள்) தேர்வுக் கட்டணம் மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் ஜன.,23க்குள் வங்கிகளில் செலுத்தி அதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களிடம் ஜன.,24க்குள் ஒப்படைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா