Skip to main content

ஆசிரியர் தகுதித் தேர்வு: 29 ஆயிரம் பேருக்கு நாளைமுதல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதன்மூலம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.சான்றிதழ் சரிபார்ப்புக்காக மாநிலம் முழுவதும் 30 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை:
"வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.
கூடுதலாக தேர்ச்சி:
நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகள் திருத்தப்பட்டன. அதில் 2 கேள்விகள் நீக்கப்பட்டதோடு, அந்த கேள்விகளுக்கு தலா 1 மதிப்பெண் வழங்கப்பட்டது. மேலும் 2 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் சரியான விடைகளாக அறிவிக்கப்பட்டன.
இதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளில் கூடுதலாக 2,436 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இதில் வெளியிடப்பட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளின் முடிவில் இரண்டாம் தாளில் மட்டும் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை திருத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில், திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறவுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்