Skip to main content

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற ரிசர்வ் வங்கி அதிரடி

"கடந்த, 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, அனைத்து கரன்சிகளும், திரும்ப பெறப்படும்," என, ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி, அதன் வலைதளத்தில் தெரிவித்துள்ள விவரம்:கடந்த, 2005ம் ஆண்டிற்கு முன், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட கரன்சிகள், திரும்பப் பெறப்படும். இது குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். இந்த கரன்சிகளை, எளிதில் கண்டறியலாம். ஏனெனில், 2005ம் ஆண்டிற்கு முன், வெளியிடப்பட்ட கரன்சிகளில், ஆண்டு அச்சிடப்பட்டிருக்காது. இந்த கரன்சிகளை, அனைத்து வங்கிகளும், வரும் ஏப்ரல், 1ம் தேதி முதல் திரும்பப் பெறும்.


வரும், ஜூலை, 1ம் தேதி முதல், வங்கி கணக்கு இல்லாதோர், 10க்கு மேற்பட்ட எண்ணிக்கையில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் கரன்சிகளை மாற்ற விரும்பினால், அடையாளம் மற்றும் வசிப்பிட சான்றை, வங்கிக்கு அளிக்க வேண்டும்.அதே சமயம், 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட கரன்சிகளும், வழக்கம் போல் செல்லுபடியாகும். இது குறித்து பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. கரன்சியை திரும்பப் பெறும் திட்டத்திற்கு, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது புழக்கத்தில் உள்ள கரன்சிகள் அனைத்தும், ஆண்டு அச்சிடப்பட்டவையாக இருக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி விரும்புகிறது. 2005ம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, 500 ரூபாய் கரன்சிகள், நீலம், மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ளன.அதன் பின், மகாத்மா காந்தி படத்துடன், ஒரே வரிசையில் கரன்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், ஒரே சீரான வடிவமைப்பில், இது போன்ற கரன்சிகள் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

*மக்கள் பீதி அடைய வேண்டாம்.
*ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கரன்சிகள் செல்லுபடியாகும்.
*வரும், ஏப்., 1 முதல் அனைத்து வங்கிகளிலும் வசதி.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன