Skip to main content

குரூப்–2 :பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகளில் கலந்தாய்வு

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாகக்கிடக்கும் ஊழியர்களின் இடங்களை நிரப்ப கடந்த 2011–ம்ஆண்டு ஜூலை மாதம் 30–ந்தேதி குரூப்–2 எழுத்துதேர்வு நடத்தப்பட்டது. இதில் நேர்முகத்தேர்வு உள்ள பணிகளும் உண்டு. நேர்முகத்தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படும் பணிகளும் உண்டு. நேர்முகத்தேர்வு பணிக்கு 3 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிஅமர்த்தப்பட்டனர். 
அதுபோல நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கு 4 முறை கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். எனவே மீதம் உள்ள பணியிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு உள்ள பணிஇடங்களுக்கு 4–வது கட்ட கலந்தாய்வும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு 5–வது கட்ட கலந்தாய்வும் பிப்ரவரி 5 மற்றும் 6 தேதிகளில் சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. 

கலந்தாய்வுக்கு வரவேண்டியவர்களின் பட்டியல், வரவேண்டிய நாள் விவரம் அனைத்தும் தமிழ்நாடு குரூப்–2அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்