Skip to main content

எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் மேல்படிப்பு: கிராமத்தில் பணிபுரிவது கட்டாயமாகிறது

எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது, ஓராண்டு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படுகிறது.
இது, 201516ம் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது. ராஜ்யசபாவில், நேற்று கேள்வி ஒன்றுக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைப்படி,"முதுகலை மருத்துவ கல்வி விதிமுறை, 2000ல்' திருத்தம் கொண்டு வரப்படுகிறது. நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 2,500 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நாடு முழுவதும் சமூக மருத்துவ மையங்களில், பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 13,500 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன