Skip to main content

எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் மேல்படிப்பு: கிராமத்தில் பணிபுரிவது கட்டாயமாகிறது

எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் போது, ஓராண்டு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்படுகிறது.
இது, 201516ம் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது. ராஜ்யசபாவில், நேற்று கேள்வி ஒன்றுக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரைப்படி,"முதுகலை மருத்துவ கல்வி விதிமுறை, 2000ல்' திருத்தம் கொண்டு வரப்படுகிறது. நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 2,500 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், நாடு முழுவதும் சமூக மருத்துவ மையங்களில், பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 13,500 டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு