Skip to main content

பான் கார்டின் முக்கியத்துவம்

பான் கார்டு’ எனப்படும் ‘நிரந்தரக் கணக்கு அட்டை’ இன்று அவசியமாகி வருகிறது. ஆனால் இன்றும் பலர் இதன் முக்கியத்துவத்தை அறியவில்லை. எனவே பான் கார்டு பற்றிய விளக்கமான தகவல்களைப் பார்ப்போம்…
Permanent Account Number என்பதின் சுருக்கமே பான் கார்டு. தற்போது வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் பண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. நிரந்தரக் கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.

இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு 100 ரூபாய்க்குள்தான செலவாகும். புரோக்கர் மூலமாகப் பெறுவதற்கு ரூ. 250 செலவாகலாம். ‘பான் கார்டின்’ அவசியம்:

1. ரூ. 5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு அவசியம்.

2. மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின்போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக).

3. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் ‘பிக்சட் டெபாசிட்’ செய்யும்போது அவசியம்.

4. அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் ‘பிக்சட் டெபாசிட்’ ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டும்போது அவசியம்.

5. ஒப்பந்த மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மிகும் போது தேவைப்படும்.

6. வங்கிக் கணக்கு துவங்கும்போது.

7. தொலைபேசி, செல்போன் இணைப்புப் பெற விண்ணப்பிக்கும்போது.

8. தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்குச் செலுத்தும் கட்டணம் ரூ. 25 ஆயிரத்துக்கு அதிகமாகும்போது அவசியம்.

9. ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD / Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமாகச் செலுத்தும்போது அவசியம்.

10. வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய அவசியம்.

11. சேவை வரி மற்றும் வணிக வரித்துறையில் பதிவுச் சான்று பெற Pan Card கட்டாயமாகும்.

12. முன்பு, மியூச்சுவல் பண்டில் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும்போதுதான் பான் கார்டு அவசியமிருந்தது.

ஆனால், தற்போது மியூச்சுவல் பண்டில் எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு