Skip to main content

அரசு ஊழியர்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தை டிசம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூடாது

அரசு ஊழியர்களுக்கு மூன்று நபர் கமிஷனின் அடிப்படையில் குறைக்கப்பட்ட ஊதியத்தை, டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவூலங்களுக்கு நிதித்துறை திடீர் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊதியத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டின.இதைத்தொடர்ந்து, ஊதியக்குழு முரண்பாடுகளை களைய தமிழக அரசு மூன்று நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.


இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய் துறை, போலீஸ் துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 22 துறைகளைச் சேர்ந்த 52 பதவிகளுக்கான அடிப்படை ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக நிதித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது, ஏற்கனவே நிர்ணயித்து வழங்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை திடீரென குறைக்கக் கூடாது என வழக்கு தொடுக்கப்பட்டது.


ஐகோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை ஜன.6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே, அடிப்படை ஊதியம் குறைத்து உத்தரவிடப்பட்ட ஊழியர்களுக்கு வழக்கு நிலுவையில் இருப்பதால், டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது.


ஏற்கனவே, ஊதியக்குழுவால் நிர்ணயித்து வழங்கப்பட்ட ஊதியத்தையே டிசம்பர் மாதத்துக்கும் வழங்க வேண்டும் என அந்தந்த துறைகளுக்கும், மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்களுக்கும் தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா