Skip to main content

ஐகோர்ட் நீதிபதியாக வேலுமணி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதியாக, வி.எம்.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். 
அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாளைமறுநாள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா, கனக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வி.எம்.வேலுமணி. 1962, ஏப்ரலில் பிறந்தார்.
பழநியில் உள்ள, பழநி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.ஏ., பட்டம், மதுரை காமராஜர் பல்கலையில், எம்.ஏ., (அரசியல் அறிவியல்) பட்டம், சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். 1989ல், வழக்கறிஞராக பதிவு செய்தார்."அய்யர் அன்ட் டோலியா' அலுவலகத்தில், வழக்கறிஞராக சேர்ந்து, "பிராக்டீஸ்' செய்தார். 

1998 - 99ல், மத்திய அரசு வழக்கறிஞராகவும், 2001 06ல், கூடுதல் அரசு பிளீடராகவும் பணியாற்றினார். 2011 முதல், சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றி வந்தார்.உயர்நீதிமன்ற நீதிபதியாக, வி.எம்.வேலுமணி, தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். நீதிபதியாக நாளை மறுநாள், பதவி ஏற்கிறார். அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நீதிபதி வேலுமணி பதவி ஏற்பதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் உள்ள, நீதிபதிகளின் எண்ணிக்கை, 47 ஆக உயர்கிறது

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு