Skip to main content

ஐகோர்ட் நீதிபதியாக வேலுமணி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதியாக, வி.எம்.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். 
அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நாளைமறுநாள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா, கனக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வி.எம்.வேலுமணி. 1962, ஏப்ரலில் பிறந்தார்.
பழநியில் உள்ள, பழநி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.ஏ., பட்டம், மதுரை காமராஜர் பல்கலையில், எம்.ஏ., (அரசியல் அறிவியல்) பட்டம், சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். 1989ல், வழக்கறிஞராக பதிவு செய்தார்."அய்யர் அன்ட் டோலியா' அலுவலகத்தில், வழக்கறிஞராக சேர்ந்து, "பிராக்டீஸ்' செய்தார். 

1998 - 99ல், மத்திய அரசு வழக்கறிஞராகவும், 2001 06ல், கூடுதல் அரசு பிளீடராகவும் பணியாற்றினார். 2011 முதல், சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றி வந்தார்.உயர்நீதிமன்ற நீதிபதியாக, வி.எம்.வேலுமணி, தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். நீதிபதியாக நாளை மறுநாள், பதவி ஏற்கிறார். அவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். நீதிபதி வேலுமணி பதவி ஏற்பதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் உள்ள, நீதிபதிகளின் எண்ணிக்கை, 47 ஆக உயர்கிறது

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா