Skip to main content

காணொலி படக்காட்சியில் பாடம் கற்பித்தல்: முதல்கட்டமாக 9 பள்ளிகளில் அறிமுகம்

திருப்பூரில் அரசு பள்ளிகளில், இணைய தளம் மூலம் வகுப்பறைகளை இணைத்து கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் "காணொலி' படக்காட்சி திட்டம் விரைவில் அறிமுகமாகிறது. முதல் கட்டமாக, ஒன்பது பள்ளிகளில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.


கம்ப்யூட்டர் இணைய தளம் மூலம், மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல், ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை தகவல் தொழில் நுட்பம் மூலம் பிற பள்ளிகளும் பயனடைய செய்தல், வெளிநாட்டு பள்ளிகளில் உள்ள கல்வி நடைமுறையை, கல்வி செயல்பாடுகளை கிராமப்புற பள்ளி மாணவர்கள் அறியும் வாய்ப்பை ஏற்படுத்துதல், கல்வியாளர்கள் மற்றும் கல்வி வல்லுனர்களின் கருத்துகளை, இணையதளத்தில் மாணவர்களுக்கு நேரடியாக "ஸ்கைப்' மூலம் தெரிவித்தல், மாணவர்கள் குழு மூலம் கற்கும் வாய்ப்பை உருவாக்குதல் என்ற அடிப்படையில், கம்ப்யூட்டர் இணைய தளத்தில் வகுப்பறைகளை இணைக்கும் "காணொலி' படக்காட்சி திட்டம், திருப்பூரில் நடைமுறைக்கு வருகிறது.


இணைய தளம் வாயிலாக வகுப்புகளை இணைப்பதன் மூலம், ஒரு ஆசிரியர் மற்ற பள்ளி வகுப்பு குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கலாம்; ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னை தவிர்க்கப்படும்.திருப்பூர் மாவட்டத்தில் இடுவம்பாளையம் பள்ளி, கேத்தனூர் பள்ளி, பாண்டியன் நகர் பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, நொய்யல் வீதி உயர்நிலைப்பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.







மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, அவிநாசி, அவிநாசிலிங்கம்பாளையம், ஊத்துக்குளி சுண்டக்காம்பாளையம், திருப்பூர் வடக்கு 15 வேலம்பாளையம், பல்லடம் (கிழக்கு) ஆகிய நான்கு நடுநிலைப்பள்ளிகளிலும், காணொலி படக்காட்சி கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்காக, கல்வி இயக்குனரகம் மூலம் பள்ளிக்கு தலா 8,000 ரூபாய் நிதி ஒதுக்கி, டேட்டா கார்டு அல்லது நெட் இணைப்பு, லேப்-டாப், எல்.சி.டி., புரொஜெக்டர் போன்ற வசதி ஏற்படுத்தப்படும், காணொலி படக்காட்சி மூலம், ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்த பயிற்சி, கோவையில் வரும் 30ல் நடக்கிறது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு