Skip to main content

54 ஆயிரம் அங்கன்வாடிகளுக்கு ரூ.15 கோடியில் கல்வி உபகரணம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 49,499 பிரதான அங்கன்வாடி மையங்கள், 4,940 கிளை அங்கன்வாடி மையங்கள் என 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. இதில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட 2 வயது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்கின்றனர். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விளையாட்டுடன் செயல் வழி கற்றல் முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான மையங்களில் குழந்தைகள் கல்வி, கற்க எவ்வித உபகரணமும் இல்லை.


சில மையங்களில் இருந்த உபகரணங்கள் பழுதடைந்து விட்டது. தன்னார்வ அமைப்புகளும் அங்கன்வாடி மையங்களுக்கு போதுமான உதவியை வழங்கவில்லை.இந்நிலையில், தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் (ஐ.சி.டி.எஸ்) சார்பில் 15 கோடி ரூபாய் செலவில் குழந்தைகள் விளையாட கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் அங்கன்வாடி களில் விளையாட்டு, கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். சுமார் 20 லட்சம் கல்வி, விளை யாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது.




இதுபற்றி தமிழக ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘மரத்தில் தயாரிக்கப்பட்ட காலணி, விலங்கு, பறவை, மரம், சதுரம், வட்டம், முக்கோணம், அறுங்கோண வடிவிலான விளையாட்டு பொருட்கள், பிளாஸ்டிக்கில் கட்டிடம் கட்டுவதற்கான பொருட்கள், கதை சொல்லும் வகையிலான பொம்மைகள் அடங்கிய அட்டை, படக்கதை புத்தகம் போன்றவை பெறப்படும். அங்கன்வாடிகளின் தரம் உயர்த்தப்பட்டதால் வரும் ஆண்டில் குழந்தைகளின் சேர்க்கை சதவீதம் 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது‘‘ என்றனர்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு