Skip to main content

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேட்டை தடுக்க புதிய நடைமுறை ஒவ்வொரு அறையிலும் 20 மாணவர்களை மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க முடிவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் முறைகேட்டை தடுக்க ஒவ்வொரு அறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
விடைத்தாளில் பெயர் எழுதத் தேவை இல்லை:
தமிழ்நாட்டில் மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு முடிந்ததும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகளை 19 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் எந்த வித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பது கருதி மாணவர்களின் விடைத்தாள்களில் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டு விடைத்தாள் புத்தகம் போல வழங்கப்பட உள்ளது. அதுபோல மாணவர்கள் விடைத்தாளில் அவர்களின் தேர்வு பதிவு எண், பெயர் எதுவும் எழுதத்தேவை இல்லை. விடைத்தாளின் முன்பகுதியில் ஒரே வித ரகசிய குறியீடு 4 இடங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடக்கும் போது எந்த வித முறைகேடும் நடந்து விடக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன், இணை இயக்குனர்கள் ராஜராஜேஸ்வரி, ராமராஜன் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.



தேர்வு அறையில் 20 பேர்கள் மட்டும்:



அதன் ஒரு பகுதியாக தேர்வு அறைகளில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். ஒரு பள்ளியில் 400 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் ஒரு அறைக்கு 20 பேர் வீதம் 20 அறைகளில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும். மேலும் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு அமைக்கும்போது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.



நேரடியாக பறக்கும்படைகள்:



இதை கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பறக்கும் படைகளையும் நேரடியாக தேர்வுத்துறை இயக்குனரே நியமிக்க உள்ளார். தேர்வு அறை கண்காணிப்பாளர்களையும் அவ்வாறே நியமிக்கபட உள்ளனர். அதுபோல விடைத்தாள் திருத்தும் பணியிலும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் நியமிக்கும் ஆசிரியர்கள்தான் ஈடுபட உள்ளனர். இதனால் எந்த வித முறைகேடும் நடக்காமல் தேர்வு நடத்தவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா