Skip to main content

133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி

சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலம் ஆசிரியர் தினவிழா, காரைக்குடியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் வரவேற்றார். கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்து பேசியதாவது:

பொருளாதாரம் மேம்பட மனித வளம் அவசியம். அவற்றை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். 2013-14-ம் கல்வியாண்டில், 133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1995 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேல்நிலை கல்வியில், இடைநிற்றலை மாணவர்கள் தவிர்க்கும் வகையில், மாநில அளவில் கடந்த 3 ஆண்டுகளில், ரூ.1055 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.2013-14ம் கல்வி ஆண்டில், சீருடைக்காக 353 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 53.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அரசு செலவு செய்யும் மாணவர்களுக்கு சென்றடையும் மிகப்பெரிய பொறுப்பில் ஆசிரியர்கள் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி, இடைநிலை கல்வி திட்டம், நபார்டு மூலம் 9.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கழிப்பறை, கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டள்ளது. உலகம்பட்டியில் விடுதி கட்ட ரூ.2.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலை துணைவேந்தர் பணிக்குழு தலைவர் கலியமூர்த்தி, பதிவாளர் மாணிக்கவாசகம், எஸ்.பி., அஸ்வின் கோட்னீஷ், மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேலு பங்கேற்றனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு