Skip to main content

133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி

சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை மூலம் ஆசிரியர் தினவிழா, காரைக்குடியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் வரவேற்றார். கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்து பேசியதாவது:

பொருளாதாரம் மேம்பட மனித வளம் அவசியம். அவற்றை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். 2013-14-ம் கல்வியாண்டில், 133 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1995 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். மேல்நிலை கல்வியில், இடைநிற்றலை மாணவர்கள் தவிர்க்கும் வகையில், மாநில அளவில் கடந்த 3 ஆண்டுகளில், ரூ.1055 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.2013-14ம் கல்வி ஆண்டில், சீருடைக்காக 353 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 53.5 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

அரசு செலவு செய்யும் மாணவர்களுக்கு சென்றடையும் மிகப்பெரிய பொறுப்பில் ஆசிரியர்கள் உள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி, இடைநிலை கல்வி திட்டம், நபார்டு மூலம் 9.62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கழிப்பறை, கட்டட வசதி ஏற்படுத்தப்பட்டள்ளது. உலகம்பட்டியில் விடுதி கட்ட ரூ.2.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலை துணைவேந்தர் பணிக்குழு தலைவர் கலியமூர்த்தி, பதிவாளர் மாணிக்கவாசகம், எஸ்.பி., அஸ்வின் கோட்னீஷ், மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன், தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேலு பங்கேற்றனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா