Skip to main content

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.2 முதல் செய்முறை பயிற்சி வகுப்பு தொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் அறிவியல் பாடப் பிரிவை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். அதேபோல பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செய்முறைத் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுமார் 8 லட்சம், மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்.

இவர்கள் தவிர ஏற்கெனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதுவோர், முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வை தனித் தேர்வர்களாக எழுதுவோர் ஆகியோரும் இந்த செய்முறைத் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.மேற்கண்ட தனித் தேர்வர்கள் செய்முறைத் தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்து ஏற்கெனவே தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இரண்டு மையங்கள் அமைக்கப்படும். அங்கு மேற்கண்ட தனித் தேர்வர்கள் நேரில் சென்று செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி பெற வேண்டும். அப்போது, 5 செய்முறைகளை ஆசிரியர்கள் செய்து பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள்துறை தெரிவித்துள்ளது.




பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வில் 25க்கு 15 மதிப்பெண் எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாகவே பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா