Skip to main content

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.2 முதல் செய்முறை பயிற்சி வகுப்பு தொடக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் அறிவியல் பாடப் பிரிவை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு உண்டு. அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். அதேபோல பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த செய்முறைத் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுமார் 8 லட்சம், மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்.

இவர்கள் தவிர ஏற்கெனவே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதுவோர், முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வை தனித் தேர்வர்களாக எழுதுவோர் ஆகியோரும் இந்த செய்முறைத் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.மேற்கண்ட தனித் தேர்வர்கள் செய்முறைத் தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்து ஏற்கெனவே தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இரண்டு மையங்கள் அமைக்கப்படும். அங்கு மேற்கண்ட தனித் தேர்வர்கள் நேரில் சென்று செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி பெற வேண்டும். அப்போது, 5 செய்முறைகளை ஆசிரியர்கள் செய்து பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள்துறை தெரிவித்துள்ளது.




பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண்ணும், செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வில் 25க்கு 15 மதிப்பெண் எடுக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாகவே பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு